districts

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணத்தில் பங்கேற்பர் அகில இந்திய ஹஜ் கமிட்டித் தலைவர் பேட்டி

கும்பகோணம், ஏப்.16 - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர்  அபுபக்கர் வேண்டுகோள் விடுத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறுகையில், இந்தாண்டு ஹஜ் பயணம் நிச்சய மாக நடைபெறும். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள். அதில்  எந்தெந்த மாநிலத்திலிருந்து எவ்வளவு பேர்  பங்கேற்பார்கள் என்று இன்னும் இரு தினங் களில் தில்லியில் நடைபெறும் ஹஜ் கமிட்டி  கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மேலும்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையி லிருந்து ஹஜ் பயணம் செய்வதற்கு உத்தரவு  கிடைக்கும். எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார் களோ, அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள் வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.