districts

img

அரசாணை 5-ஐ முழுமையாக அமல்படுத்தாததால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பாதிப்பு

மதுரை, ஆக.22- அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரி ஆசிரியர்களுக்கு இணைப்  பேராசிரியர் ஊதியம் உட்பட அனைத்து ஊதியங்களும் வழங்கிட  தேவையான நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒதுக்கிய நிலை யில், அரசு கல்லூரி ஆசிரியர் களுக்கு மட்டும் நிலுவைத் தொகை யோடு ஊதியம் வழங்கி விட்டு,  அரசு உதவி பெறும் கல்லூரி ஆசி ரியர்களுக்கு ஊதியம் கூட வழங்கா மல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் உயர்கல்வித்துறையில் நிர்வாக முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக மூட்டா கருதுகிறது.  முன்னர், நிதிப்பற்றாக்குறை என்று அதிகாரிகள் கூறி வந்த  நிலையில், 2023-2024 ஆம் நிதி யாண்டில் உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கிய மானியத்தில் ரூ.200 கோடிக்கும் அதிகமான நிதியை நிதித்துறைக்கு உயர்கல்வித்துறை திருப்பி அனுப்பியுள்ள செயலா னது அனைவரையும் அதிர்ச்சிக்குள்  ளாக்கியுள்ளது. நிதித்துறை நிதி  ஒதுக்கியும் நிதியினை சரிவர பயன்  படுத்தாமல், ஆசிரியர்களின் மீதான  பாதிப்பு தொடர்வதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தஞ்சாவூர் மற்றும் கோயமுத்தூர் மண்டலங்களில் மட்டும் அரசு உதவி பெறும் கல்லூ ரிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள் ளது. பிற ஆறு மண்டல ஆசிரி யர்களுக்கு ஊதியம் கூட வழங்கப் படவில்லை. உயர்கல்வித்துறையின் இந்த  சட்டவிரோத செயலைக் கண்டிப்பது  மட்டுமின்றி, இந்த நிர்வாக முறை கேட்டிற்கு காரணமான அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து விசாரணைக் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப் பேரா சிரியர் உட்பட அனைத்து பணி மேம்  பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலு வைத் தொகையினை காலதாமத மின்றி உடனடியாக வழங்கிட வலி யுறுத்தி மதுரை மற்றும் திருநெல்  வேலி மண்டலங்களில் மூட்டா சார்பில் செவ்வாயன்று பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.  மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவல கத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருது நகர் மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மூட்டா மண்டல தலைவர்கள் ரமேஷ்ராஜ் மற்றும் ஞானேஸ்வரன் ஆகியோர்   தலைமை வகித்தனர். மூட்டா துணைத் தலைவர் பெரியசாமிராஜா துவக்கவுரையற்றினார். மண்ட லச் செயலாளர்கள் ராபர்ட் திலீபன்,  வில்சன் பாஸ்கர், முதலாம் மண்ட லப் பொருளாளர் தேவகி துரைசிங் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். மூட்டா தலை வர் செந்தாமரைக்கண்ணன் நிறை வுரையாற்றினார். இரண்டாம் மண்டலப் பொரு ளாளர் பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.