கரூர், செப்.2 - கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதி யில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையி லும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், நவீன சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 41 ஆவது வார்டு தாந்தோணிமலை அசோக்நகர், ஜீவா நகர், விக்னேஷ்வரா நகர், கணபதிபாளை யம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் குற்றக் கண்காணிப்பு பணிக்கு 5 இடங்களில் ரூ.75 ஆயிரம் மதிப்பில், நவீன சுழலும் கேமராக்கள் பொருத்தும் பணிகளை 41 ஆவது மாநகர வார்டு கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளரு மான எம்.தண்டபாணி மேற்கொண்டுள்ளார். கரூர் அசோக் நகர் 2 ஆவது கிராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன சுழ லும் சிசிடிவி கேமராவை தாந்தோணிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தில்லைக் கரசி தொடக்கி வைத்தார். 41 ஆவது வார்டு சிபிஎம் உறுப்பினருமான எம்.தண்டபாணி தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.