பாபநாசம், மே 26-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள தீபக் ஜேக்கப்-பை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜவாஹிருல்லா சந்தித்தார். அப்போது பாபநாசம் தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுக்களை அளித்தார்.