மயிலாடுதுறை, ஆக.18 -
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் விரைவில் “ஹெல்த் வாக்” திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மயி லாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகம் முதல் புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8 கி.மீ தூரம் நடைப்பயிற்சி மேற் கொள்வதற்கான நடை பாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வினை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், பொது சுகா தாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவ லர் மு.மணிமேகலை, சுகா தார துறை இணை இயக்கு நர் மரு.எஸ்.குருநாதன் கந்தையா, சுகாதார துறை துணை இயக்குநர் மரு.அஜித் பிரபுகுமார், மயிலாடு துறை வருவாய் கோட்டாட்சி யர் வ.யுரேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.