districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை, மார்ச் 8 - புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மற்றும் அறந் தாங்கி ஊராட்சி ஒன்றியப்  பகுதிகளில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் மாணவ, மாணவி களுக்கு வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அரை யப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 89  மாணவ, மாணவிகளுக்கும், வெண்ணா வல்குடியில் 144 பேருக்கும், வேங்கிட குளத்தில் 151 பேருக்கும், வல்லத்திராக்கோட் டையில் 122 பேருக்கும், திருவரங்குளத்தில் 122 பேருக்கும், மாஞ்சான்விடுதியில் 111 பேருக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, திருவரங் குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளி யம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.