புதுக்கோட்டை, பிப்.7 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட கீரனூர் திட்டப் பகுதியில் 368 அடுக்குமாடி குடி யிருப்புகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செவ் வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட் டம், குளத்தூர் வட்டம், இளையாவயல் கிராமம், கீரனூர் திட்டப் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.35.51 கோடி மதிப் பீட்டில் புதிதாகக் கட்டப் பட்டுள்ள 368 அடுக்குமாடி குடியிருப்புகளை, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, பயனாளி களுக்கு ஒதுக்கீட்டு ஆணை கள் மற்றும் வீட்டிற்கான சாவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரி விக்கையில், “இத்திட்டத் தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் சுமார் 36.77 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, பயன்பாட்டு அறை, குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதி கள் உள்ளன. இந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு பய னாளியின் பங்களிப்புத் தொகையாக ரூ.1,50,000 பெறப்பட்டு, குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 51 பயனாளிகளுக்கு ஒதுக் கீடு ஆணைகள் வழங்கப் பட்டன” என்றார். திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். புதுக் கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் மரு.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கே.கே.செல்லபாண்டி யன், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.