மயிலாடுதுறை, ஆக.6 - மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடி கிராமத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மயி லாடுதுறை நகராட்சி புதிய பேருந்து நிலை யம் கட்டப்பட்டு வருவதை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.24 கோடி மதிப்பீட்டில் 5,183 சதுர.மீ. பரப்பளவில் மயிலாடுதுறை நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் 28 பேருந்து கள் நிற்கும் வகையிலும், 49 கடைகள், 10 பயணிகள் காத்திருக்கும் இடம், பொருட் கள் வைப்பறை-1, உணவ கங்கள்-2, தாய்மார்கள் பாலூட்டும் அறை கள்-2, முன்பதிவு நிலையம்-1, நேரம் காப்பாளர்-2, காவல் துறை அறை - 1, கட்டுப்பாட்டு அறை - 1, நவீன வசதிகளுடன் கூடிய 32 இலவச கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் கழிப்ப றைகள் 2 ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது, மேற்கூரை கான் கிரீட் மற்றும் அனைத்து கட்டட வேலைகளும் முடிவுற்று, பூச்சு வேலை, வண்ணப் பூச்சு வேலை நடைபெற்று வருகிறது. இப்பணி களை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக கேட்டறிந்து பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என பொறியாளரிடம் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் உடனிருந்தனர்.