நத்தம், மார்ச் 22- திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் அறிமுக கூட்டம் நத்தத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில், திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியாசாமி தலைமை வகித்து சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந் தத்தை அறிமுகம் செய்து வைத் தார். கூட்டத்தில், அமைச்சர் ஐ.பெரிய சாமி பேசுகையில், ‘‘கடந்த நாடாளு மன்றத் தேர்தலைவிட, இம்முறை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திண்டுக்கல் லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறுவது உறுதி. சிறுபான்மை இன மக்கள் எப்பொ ழுதும் நம் பக்கம் தான் உள்ளனர். சிறுபான்மையினரை அரவணைக்க கூடிய இயக்கமாக திமுக உள்ளது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அனைவரும் மத வேற்றுமை களையும் சாதிய உணர்வுகளையும் மறந்து ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டும். அதுதான் இந்த தேர்த லின் முடிவாக இருக்க வேண்டும். இன்றைக்கு எந்த கட்சியும் பாஜக வுடன் கூட்டணி செல்ல மறுக்கிறார் கள். பாஜக தேர்தலில் போட்டியிடு வதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பாஜகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் மற்ற கட்சிகளும் ஒன்றுதான். இவை யெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரா னவை, சர்வாதிகாரத்தை ஆதரிப் பவை. நம் நாட்டின் முதல் சுதந்திரப் போருக்கு பிறகு இன்றைய அரசியல் சூழலில் நடைபெறுகின்ற இந்த நாடா ளுமன்றத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர். இந்த இரண்டாவது சுதந்திர போரில் இந்தியா கூட்டணி கைகோர்த்து நிற்கிறது. இதில் வெற்றி உறுதி செய்யப்பட வேண் டும். நாம் அனைவரும் தேர்தல்களத் தில் தீவிரமாக பணியாற்ற வேண் டும். நாடாளுமன்றத்தில் சச்சிதானந் தத்தின் பணி எதிரொலிக்கும்’’ என் றார்.