அதிகளவு மழை பெய்தால் விடுமுறை விட ஆட்சியர் முடிவெடுக்கலாம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
தஞ்சாவூர், அக்.16 – தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டடங் களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரிடர் மேலாண்மை குறித்த கூட்டம் முதல்வர் தலைமை யில் நடக்க உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால், எனது அறிவுறுத்தலுக்கு எதிர்பார்க்காமல், விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து கொள்ளலாம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை பொறுத்தவரை மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 64 லட்சம் பெண்கள், தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதால், உரிமை தொகை வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு செய்யவும் கூறியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை வழங்க லாம். அவ்வாறு வழங்கப்படும் மனுக்களில் தகுதி உடைய வராக இருந்தால் விட்டு விடாமல் கிடைக்க ஆட்சியரிடம் கோரி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் செயலாளர் விஷம் குடித்து தற்கொலை
பெரம்பலூர்.அக்.16- பெரம்பலூர் மாவட்டம், தொண்டைமாந்துறை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கணபதி (54). இவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூடுதல் செயலாளராக இருந்தார். இவருக்கு சரசுவதி (45) என்ற மனைவியும்; அருண்குமார் (17) ராஜவிக்னேஷ் (8) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அக்டோபர் 16 அன்று பணிக்குச் சென்றவர், வங்கியின் உள்ளே விஷம் குடித்துவிட்டு இறந்து கிடந்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கணபதியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.