பெரம்பலூர், நவ.7 - பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று ஆட்சியர் க.கற்ப கம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் என்.செல்ல துரை தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், “கடந்த 31.10.2023 அன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆவினுக்கு தினசரி சுமார் 15 லட்சத் திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியா ளர்கள், 38 லட்சம் லிட்டர் பால் வழங்கி வந்ததாகவும், தற்போது 26 லட்சம் மட்டுமே வழங்குவதால் கொள்முதல் குறைந்து விட்டது. இதற்கு, தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் ஒரு லிட்டருக்கு ஆவினைவிட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதல் விலை வழங்குவதே காரணம். அதேபோல மாட்டு தீவனங்கள் இரு மடங்கு உயர்ந்துள்ளதாலும், மாடுகளை பரா மரிக்கும் செலவு கூடியுள்ள நிலை யில் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் இடத்திலேயே ஸ்பாட் டெக்னாலஜி மெஷின் வைத்து, கொழுப்பு புரதச்சத்தை தீர்மானித்து விலை அறிவிக்கும் நடைமுறையை அனைத்து சொசைட்டிகளிலும் கொண்டு வர வேண்டும். கறவை மாடுகள் வாங்கு வதற்கு மானியத்தோடு வங்கிக் கடனும், பராமரிப்பு செலவிற்கு வட்டி யில்லா கடனும் வழங்க வேண்டும். ‘தீபா வளிக்குள் அனைத்து பால் உற்பத்தியா ளர்களுக்கும் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்’ என பேச்சு வார்த்தையின் போது அமைச்சர் தெரி வித்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சியர் தீபாவளிக்குள் போனஸ் மற்றும் ஊக்கத்தொகையினை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சி யர் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி களிடம் கொடுத்து தீபாவளிக்குள் போனஸ், கூடுதல் தொகை கிடைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.