districts

img

கீழ்வேளூர் தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் நாகை மாலி

நாகப்பட்டினம் ஜூன் 27-

     நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட ஊராட்சிகளில் நாகை.மாலி  சுற்றுப்பயணம் செய்து மக்  கள் அளித்த கோரிக்கை மனுக் களைப் பெற்றுக்கொண்டார்.

    கீழ்வேளூர் வட்டம்  ஆந்தகுடி, சிகார், கூரத்தங் குடி மணலூர்,கில்லுக்குடி வெண்மணி, தேவூர், மோக னூர், வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், 119 அனக்குடி, சாட்டியக்குடி, ஆதமங்கலம், கோவில்  கண்ணாபூர், கொடியாளத் தூர், வலிவலம், தலை ஞாயிறு ஒன்றியத்தில் பாங்  கள் பனங்காடி, கொளப் பாடு, கச்சநகரம், சித்தாய் மூர்,கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு வந்தி ருந்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்

   தூய்மைப்பணி யாளர்  கள், பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாற்றுத்  திறனாளிகள், அனைத்து ஊராட்சி கிராம பொதுமக் கள் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.  

    இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்  பினர்கள் வி.சுப்பிரமணி யன், ப.சுபாஷ் சந்திரபோஸ், டி.லதா, கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜா, வாலிபர் சங்க மாவட்  டச் செயலாளர் டி.அருள் தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி பாசு, வட்டார வளர்ச்சி அலு வலர்கள், கிராம நிர்வாக  அலுவலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.