கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதிப் பட்டை வழங்கும் விழா
தஞ்சாவூர், பிப்.19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரை புடோ கான் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு தகுதிப் பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் மற்றும் முதன்மைப் பயிற்சியாளர் சென்சாய் என். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில், பழனிவேல் என்பவருக்கு கருப்பு பட்டையும் மற்றும் 25 மாணவ, மாணவிகளுக்கு நீலம், ஆரஞ்ச், மஞ்சள், வெள்ளை-மஞ்சள் என தகுதிப் பட்டைகள் வழங்கப்பட்டன. பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொன்.ராமமூர்த்தி, பொன்.நடராஜன், ரஹீம், சதீஷ், பெற்றோர்கள். பயிற்சியாளர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
அம்மாபேட்டை, பிப். 19- அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்களத்தை அடுத்துள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி யில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20. 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட வகுப்பறை கட்டடங்களை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா திறந்து வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தான கிருஷ்ணன், அமானுல்லா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், திமுக தெற்கு ஒன்றியச் செயலர் குமார், வெங்கட், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பாதுஷா, ஹிபாய துல்லா, ரிபாயி ஆகியோர் பங்கேற்றனர். திருவையாத்துக்குடி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருவையாத் துக்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் தொடங்க உள்ளது. பணிகள் தொடக்கவிழா நிகழ்வில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சாலை விழிப்புணர்வுப் பேரணி
பாபநாசம், பிப் 19- பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாது காப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பாப நாசம் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியை பாபநாசம் காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் பூரணி துவங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற ஆப்தீன் பள்ளி மாணவர்கள் சாலை பாது காப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். ரோட்டரி மாவட்டம் 13 உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சாலைப் பாதுகாப்பு சேர்மன் ரவிச் சந்திரன், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், செயலாளர் சிலம்பரசன், முன்னாள் உதவி ஆளுநர்கள் சரவணன், செந்தில்நாதன், விவேகா னந்தம், பக்ருதீன், அன்பு சீனிவாசன், சேவியர், காதர் பாட்சா, செல்வக் குமார், லயன்ஸ் கிளப் நவநீத கிருஷ்ணன், முத்தமிழ்ச் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிப்.23-இல் முதுகுத் தண்டு வடம் பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர், பிப்.19 - தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத்தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. முதற்கட்டமாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிப்.23 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை முதுகுத்தண்டு வடம் காயமடைந்த வர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை நிதி நிறுவன மோசடி புகராளிக்க காவல்துறை கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.19- மதுரை ஞானஒளிவுபுரத்தில் இயங்கி வந்த தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பணம் பெறா தவர்கள் புகார் செய்யலாம் என்று தஞ்சாவூர் பொருளாதா ரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கூறியுள்ளாா். மதுரை ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோடு 2-வது தளத்தில் கதவு எண் 38இ-ல் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த கரிமா அக்ரிடெக் என்ற நிறுவனத்தை அதன் நிர்வாக இயக்குநர்கள் பொதுமக்களிடம் தங்களது நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டியுடன் பரிசுகள் தருவதாக பல திட்டங்களை கூறி மக்களை முதலீடு செய்ய செய்துள்ளனர். இதன்படி தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் இந்த நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்தனர்.ஆனால் நிதிநிறுவன இயக்குநர்கள் கூறியபடி பணத்தை திரும்பத் தராமல் நிதிநிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர் என விருதுநகரைச் சேர்ந்த சிவசக்தி மற்றும் 104 பேர் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவு பெறப்பட்டதின்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தற்போது புலன்விசாரணையில் உள்ளது. எனவே கரிமா அக்ரிடெக் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தைத் திரும்ப பெறாதவர்கள் தங்களது புகாரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பாநகர் முதலாவது குறுக்குத்தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து கொடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோட்டூர் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா
கோட்டூர், பிப்.19- திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியை அடுத்துள்ளது கோட்டூர். இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ 5.12 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகப்பட்டினம் மக்க ளவை உறுப்பினர் செல்வராஜ், திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே. கலைவாணன், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, க.மாரிமுத்து, கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜி. ஆனந்தன், ஒன்றியக்குழுத் தலை வர் மணிமேகலை, தேவதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மஞ்சுளா இலரா, கலைவாணி மோ கன், ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருத்துறைப் பூண்டி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட புழுதிகுடி ராமச்சந்திரபுரம் - சபாபதிபுரம் இணைப்புச் சாலை ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் நடை பெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணி தொடக்க நிகழ்வும் நடைபெற்றது.
மின் இணைப்புகள் முறைகேடு: ரூ. 1.62 லட்சம் அபராதம்
தஞ்சாவூர், பிப்.19- தஞ்சாவூரில் மின் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது கண்டறி யப்பட்டு, ரூ. 1.62 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூா் வட்ட மேற்பார்வைப் பொறியாளா் மு. நளினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூா் அருளானந்த நகா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் பகிர்மான வட்டச் செயற் பொறியாளா் (பொது) பி. விமலா தலைமையில் 89 உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியா ளா்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் கூட்டாய்வு செய்யப்பட்டது. அப்போது, 9 மின் இணைப்புகள் தவ றாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, அபராத தொகையாக ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி
மயிலாடுதுறை, பிப்.19- மயிலாடுதுறை மாவட்டம், பொறை யார் அருகேயுள்ள காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள அரசினர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரசு மற்றும் தனியார் கல்லூ ரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற னர். இப்போட்டிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அப் துல்லாஷா தலைமை வகித்தார். மாவட்ட கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவர் ஆனந்து முன்னிலை வைத்தார். போட்டி யை திருச்சிராப்பள்ளி மண்டல முதன்மை மேலாளர் பியூலா கேன் சுசீலா துவக்கி வைத்தார். போட்டியில் பொறையார் டி.பி. எம்.எல். கல்லூரி முதல் இடத்தையும், மணல்மேடு அரசினர் கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி.கலைக்கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன. முறையே மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெ டுக்ப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட கிரிகெட் அணி உருவாக்கப்பட்டது. இவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். கிரிக்கெட் போட்டி யினை உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன், உடற்கல்வி ஆசியர்கள் சுதாகர், செந்தில், ஷாஜகான், கேர் டேக்கர் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
துணை சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை
அரசு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருவாரூர்,பிப்.19- துணைச் சுகாதார நிலையங்க ளில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இப்பிரச்சனை மீது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:- திருவாரூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, மாவட்டத் தலைமை மருத் துவமனை, அரசு வட்டார மருத்துவ மனைகள் 8, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 36, மேம் படுத்தப்பட்ட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 10, கிராமப் புற துணை சுகாதார நிலையங்கள் 200 நகர் துணை சுகாதார நிலை யங்கள் 4, நடமாடும் மருத்துவ மனைகள் 10 செயல்பாட்டில் உள்ளன. திருவாரூர் மாவட்டம் கிராமப் புறங்களை அதிகம் உள்ளடக்கிய பகுதி என்பதால் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் 200 செயல் படுகின்றன. ஆனால், துணைச் சுகாதார நிலையங்களில் போது மான அளவு மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடிவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அண்மையில் பருவம் தப்பிப் பெய்த மழை காரணமாக, பெரும் பாலான கிராமப்புற மக்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு சிகிச்சை பெற சுகாதார நிலையங்களுக்குச் சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் லேப்டெக்னீ சியர்கள் இல்லாததால் உரிய முறையில் உடனடியாக நோயை கண்டறிய முடியாமல் மருத்துவம் பார்க்க முடியாமல் மக்கள் தவிக் கின்றனர். கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென் றால் பெரும் பொருளாதார செலவு ஏற்படும். தமிழக அரசு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுசுகா தார மையங்கள் மற்றும் வட்டா ரத் தலைமை மருத்துவமனை களிலும் ஆய்வு செய்து மருத்துவ மனைகளில் காலியாக உள்ள இடங்களில் மருத்துவர்களை நிய மிக்க வேண்டும். செவிலியர்கள், லேப்டெக்னீசியன் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஒன்றிய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு பிப்.28-இல் வாகனங்களை நிறுத்திப் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, பிப்.19- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.22-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் 15 நிமி டங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்துவ தென சிஐடியு முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைப்பின் மாவட்டத் தலைவர் சீனி வாசன், மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் ஞாயிறன்று கூறியதாவது:- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.22-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பாலக்கரை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, ஆன்லைன் மூலம் அபராதம் விதிப் பதைக் கைவிட வேண்டும், 15 ஆண்டுகள் முடிந்த வாக னங்களை பயன்படுத்த ஒன்றிய அரசு விதித்துள்ள தடை யை விளக்கி கொள்ள வலியுறுத்தி ஸ்ரீரங்கம், ஜங்ஷன், மரக்கடை, கருமண்டபம், கல்லுக்குழி, உறையூர், ஏர்போர்ட் உள்ளிட்ட ஏழு இடங்களில் பிப்.28-ஆம் தேதி பகல் 12 மணி முதல் 12.15 மணிவரை 15 நிமிடங்கள் வாக னங்களை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
புதுக்கோட்டையில் தமுஎகச மகளிர் கிளை தொடக்கம்
புதுக்கோட்டை, பிப்.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மகளிர்கிளை புதுக்கோட்டையில் தொடங் கப்பட்டது. அமைப்புக் கூட்டத்திற்கு அ.மணிமேகலை ஜெயராமன் தலைமை வகித்தார். தமுஎகச மாநி லத் துணைத் தலைவர்கள் நா.முத்துநிலவன், ஆர்.நீலா, துணைச்செயலர் ஸ்ரீரசா, மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலர் ஸ்டாலின் சரவணன், பொரு ளாளர் கி.ஜெயபாலன், ,மருத்துவர் நா.ஜெயராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தலைவராக அ.மணிமேகலை ஜெயராமன், செயலா ளராக சீ.சாந்தி நாகமுத்து, பொருளராக ரஞ்சனி பிரசன்னா, துணைத் தலைவர்களாக மங்கை ஈஸ்வரன், காயத்திரி, துணைச் செயலர்களாக ராணி, கார்த்திகா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். முன்னதாக சாந்திநாகமுத்து வரவேற்றார். ரஞ்சனிபிரசன்னா நன்றி கூறினார்.
சிஐடியு நிர்வாகிகள் தேர்வு
அரியலூர், பிப்.19 - அரியலூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் சிஐடியு பேரவை நடைபெற்றது. இதில் புதிய தலைவராக இ. ஐயப்பன், செயலாளராக இ.ரங்கராஜ், பொருளாளராக என்.அறிவழகன், துணைத் தலைவர்களாக சரவ ணன், சிவலிங்கம், துணைச் செயலாளர்களாக விநாயக மூர்த்தி, வேணுகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரை சாமி, ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆண்டிமடம் அருகே கோவில் உண்டியல் திருட்டு
ஆண்டிமடம், பிப்.19- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணிக்குறிச்சான் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதி லிருந்த ரூ.2 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
அரியலூர், பிப்.19- அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மங்கையர்க்கரசி மகன் மற்றும் மகளுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் செல்வராஜ் மனவேதனை யில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி விஷம் குடித்தார். அரியலூர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.
தனியார் மயமாக்கப்பட்ட கழிப்பறைகளில் க்யூஆர் கோடு வசதி
திருச்சிராப்பள்ளி, பிப்.19- திருச்சிராப்பள்ளியில் 403 சிறுநீர் கழிப்பறைகள், பொதுக்கழிப்பறைகள் உள்ளன. கழிப்பறைகள் பெரும்பா லும் தனியாரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இங்கு தினக் கூலித் தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சுத்த மாக உள்ளதா? என்பதை மக்களிடமிருந்து அறிந்து கொள்ள க்யூஆர் கோடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மாநகராட்சி அதிகாரியொருவர், சிலரிடமிருந்து நேர்றையான கருத்துக்களும் வரப் பெற்றுள்ளன என்றார். மாநகராட்சி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததா ரர்களிடம் ஒப்படைத்துள்ளது. கழிப்பறைகள் குறித்து வரும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உதவு வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக திருச்சிராப்பள்ளி கட்டுமானத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ரியல் எஸ்டேட் டெவ லப்பர்கள் தங்களிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழி லாளர்களுக்கு ஓய்வறைகள் கட்டித்தர வேண்டும். இங்கு பணியாற்றுபவர்கள் பலர் திறந்த வெளிகளையே கழிப்ப றைகளாக பயன்படுத்துகின்றனர் என்பதை எங்களது கணக்கெடுப்பு காட்டுகிறது என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். அதே நேரத்தில் திருச்சிராப்பள்ளி நகரில் மாற்றுத்திற னாளிகளுக்கு போதுமான கழிப்பறை வசதிகளை அதற்கான கட்டமைப்போடு உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பூட்டப்பட்டிருக்கிறது அல்லது மோசமாகப் பராம ரிக்கப்படுகிறது. அல்லது பல இடங்களில் கழிப்பறைகள் இல்லாத நிலையும் உள்ளது என்கின்றனர் மாற்றுத் திறனாளிகளுடன் உடன் வருவோர்.