தஞ்சாவூர், டிச.18 - வியாபாரியிடம் பணத்தை வழிப்பறி செய்த இரு வர் ஓராண்டிற்கு பிறகு கைது செய்யப்பட்டனர். திருச்சியில் உருளைக்கிழங்கு மொத்த வியா பாரியான வெங்கடாசலத்திடம், பெரிய மிளகு பாறையை சேர்ந்த நாகரத்தினம் (65) என்பவர் பணி யாற்றினார். சிறு வியாபாரியான இவர் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சில்லரை வியா பாரிகளிடம் பணம் வசூல் செய்து வருவது வழக்கம். கடந்த 2022 நவ.29 அன்று, தஞ்சாவூரில் உள்ள வியாபாரிகளிடம் வசூல் செய்த 8 லட்சம் ரூபாயை, பையில் எடுத்துக் கொண்டு டூ-வீலரில் திருச்சிக்கு சென்ற போது, மர்ம நபர்கள் நாகரத்தினத்திடம் இருந்து பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஓராண்டாக மர்ம நபர்களை தேடி வந்த நிலை யில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புதுக் கோட்டையில் இளவரசன் என்பவரது கொலை வழக் கில், புதுக்கோட்டை சிறையில் இருந்த தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த கூலிப்படையில் உள்ள ராஜா என்ற குஜிலி ராஜா (31) என்பவருக்கு, இந்த வழிப்பறி யில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து புதுக்கோட்டை காவல்துறையினர் உதவியுடன், ராஜாவை தஞ்சாவூர் தனிப்படையினர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், இளவரசனை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், கூலிப்படையினருக்கு தேவை யான உதவிகளை செய்யப் பணம் இல்லாததால், தனது நண்பரான தஞ்சாவூர் வடக்கு வாசல், சுண்ணாம்பு காரத் தெருவைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் ராஜா பணம் கேட்டுள்ளார். அப்போது, தாமோதரன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேம் குமாரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றிய பிரேம்குமார் (25), வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செய்யும் நாகரத்தி னத்திடம் வழிப்பறி செய்தால், போதிய பணம் கிடைக்கும் என தாமோதரனிடம், கூறியுள்ளார். இதையடுத்து, தாமோதரன், பிரேம்குமார், ராஜா, திருவாரூரைச் சேர்ந்த சுரேஷ், மானாமதுரையை சேர்ந்த வசந்த் ஆகியோர், வியாபாரியான நாகரத்தினத்திடம் இருந்து பணத்தை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. பின்னர் ராஜா மற்றும் பிரேம்குமாரை காவல்துறை யினர் கைது செய்தனர். இதில், இளவரசனை கொன்ற வழக்கில் கைது செய் யப்பட்ட மானாமதுரையைச் சேர்ந்த வசந்த் தற்போது சிறையில் உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள தாமோதரன், சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறை யினர் தேடி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலையில், ராஜாவிற்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.