அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஜி.மணி முதலாமாண்டு நினைவு புகழஞ்சலி கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.