மதுரை, மே 24-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார் கருமுத்து தியாகராஜர் - இராதா தம்பதியரின் மகன் கரு முத்துகண்ணன். இவர் மதுரை தியாகராசர் பொறி யியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகி யாகவும் செயல்பட்டுவந்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசு வரர்கோயில் தக்காராககடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துவந்தார்.மீனாட்சியம்மன் கோவிலுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத் தார். ஒன்றிய ய அரசின் ஜவுளி குழுத்தலைவராக நியமிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் மே 23 செவ் வாயன்று அதிகாலையில் காலமானார். இவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.