மதுரை, ஜூன் 29-
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ஆம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழு வதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர்.
திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. பக்தர்களிடம் கோவில் நிர்வாக சார்பாக மொய் வசூல் செய்யப்பட்டது
இதற்காக கோவில் வளாகத்திற்குள் 6 இடங்களில் மொய் வசூல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் மொய் விருந்தில் கிடைக்கப்பட்ட வசூல் எவ்வளவு என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 லட்சத்து 80 ஆயிரத்து 350 ரூபாய் மொய் வசூல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.