districts

img

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி வாய்ப்பு புதுகை மாணவர்கள் 19 பேருக்கு இடம் கிடைத்தது

புதுக்கோட்டை, ஜூலை 28 -

       7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் புதுக் கோட்டை மாவட்டத்திலிருந்து 19 மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

      தமிழ்நாடு அரசின் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 விழுக்காடு உள்  இட ஒதுக்கீட்டிற்கான மருத்துவப் படிப்பு  கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத் தில் இருந்து 50 மாணவ-மாணவிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

    முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட  கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்த 18 பேருக்கு, பல்வேறு அரசு  மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கும், ஒரு மாண விக்கு பிடிஎஸ் படிக்கவும் இடம் கிடைத் துள்ளது.

    கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி ஆகிய 3 பேரும், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஹரிராஜ், ஜெகதீஸ்வரன் ஆகிய 2 பேரும், அதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜேஸ்வரி, நிவேதா  ஆகிய இருவரும், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  பாலகிருஷ்ணன், மனோஜ், பரம்பூர் பிர வீன், வெண்ணாவல்குடி நந்தகுமாரன், கந்தர்வகோட்டை பவித்ரா, சூரியூர் பிர காஷ், தாஞ்சூர் மகேஸ்வரன், ராப்பூசல் காயத்திரி, விராலிமலை அறிவுநிதி, அரி மளம் ரெத்தினவேல், கல்லாக்கோட்டை யுவ திகா என 18 பேர் எம்பிபிஎஸ் படிக்கவும், சந்தைப்பேட்டை மாணவி செல்லமுத்து பிடிஎஸ் படிக்கவும் என 19 மாணவர்களும் பல் வேறு கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.