தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் அருகே, மாதாக்கோட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மூன்றாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். முகாமில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.நர்மதா, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் க.தமிழ்ச்செல்வம், உதவி இயக்குநர் சையத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மிரு கவதை தடுப்பு சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியர் நட்டு வைத்தார். அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த அருள்மொழி கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். முகாமில், கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், உதவி இயக்கு நர்கள் சொக்கலிங்கம், ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.