தஞ்சாவூர், டிச.25 - தஞ்சாவூர் விளார் சாலை யில் பழுதடைந்த புதை சாக்கடை முதன்மைக் குழாயில் மேற்கொள்ளப்ப டும் சீரமைப்பு பணி ஓரிரு நாளில் நிறைவடைந்து விடும் என்றார் மேயர் சண்.ராமநாதன். மருத்துவக் கல்லூரி சாலை எல்.ஐ.சி காலனி, பாலாஜி நகர், புதிய பேருந்து நிலையப் பகுதியி லிருந்து வரும் கழிவு நீர் விளார் சாலை புதை சாக்கடை முதன்மைக் குழாய்க்கு வருகிறது. இந்நி லையில், இக்குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைப்ப தற்கான பணி சில நாட்களுக்கு முன்பு தொடங் கியது. இப்பணியை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் க.கண்ணன் திங்கள் கிழமை ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்க ளிடம் மேயர் தெரிவிக்கை யில், “விளார் சாலை புதை சாக்கடை குழாய் தொடர் மழையால் பழுதடைந்த தால், சில நாட்களாக அப்பகுதி மக்கள் பாதிக்கப் பட்டனர். இதனால் உடனடி யாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணி ஓரிரு நாட்களில் நிறை வடைந்துவிடும். இதேபோல, சாலைக் காரத் தெரு, பழைய ரெஜிஸ்டர் அலுவலகப் பகுதிகளிலும் புதை சாக்கடை முதன்மைக் குழாய் பழுதடைந்துள்ளது. தொடர் மழையால் கழிவு நீர் வேகம் அதிகரித்ததால் இப்பாதிப்பு ஏற்பட்டது. அவற்றையும் சீரமைக்கும் பணி வேகமாக மேற்கொள் ளப்படுகிறது” என்றார். அப்போது, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர் மு.வைஜெயந்தி மாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.