மயிலாடுதுறை, பிப்.9- சென்னை மான்போர்ட் கலையரங்கில் 39-ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவிகள் ஸ்வேதா, தீபா இருவரும் மயி லாடுதுறை மாவட்ட கராத்தே அணி சார்பில் கலந்து கொண்டு இருவரும் வெண்கல பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும், பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவனையும், மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் சென்சாய் அல்தாப் ஆலம், நடுவர் குழுத் தலை வர் சென்சாய் முத்துராஜு, ஜென் கராத்தே ஸ்கூல் ஆப் இந்தி யாவின் தலைவர் சென்சாய் கார்த்திகேயன், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர்.நெடுஞ்செழி யன் உள்ளிட்டோர் பாராட்டினர்.