மயிலாடுதுறை, ஏப்.1- வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஓராண்டு காலம் விவசாயிகள் நடத்திய தொடர் போராட் டத்திற்கு பிறகு ஒன்றிய பாஜக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை இதுவரையிலும் நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவதைக் கண்டித்தும், வாக்குறுதி களை நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் இணைந்து ஏப்ரல் 5 அன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணியை தில்லியில் நடத்த வுள்ளது. மாபெரும் பேரணியில் பங்கேற்பதற்காக மயிலாடு துறை மாவட்டத்திலிருந்து 25 பேர் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலை மையில் மயிலாடுதுறை நிலையத்திலிருந்து ரயிலில் புறப்பட்டனர். பேரணியில் பங்கேற்க புறப்பட்ட தோழர் களை மார்க்சிஸ்ட் கட்சியினர் கம்பீர முழக்கமிட்டு வழி யனுப்பி வைத்தனர்.