மயிலாடுதுறை, ஜூலை 13- மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சுதா, திருக்கடையூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். மயிலாடுதுறை மக்கள வைத் தொகுதியில் திமுக தலை மையிலான கூட்டணியில் காங்கி ரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினராக பதவியேற்ற தைத் தொடர்ந்து, தனது தொகுதி வாக்கா ளர்களுக்கு வியாழக்கிழமை முதல் நன்றி தெரிவித்து வரும் நிலையில் சனிக்கிழமை காலை காழியப்பநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், திருக்கடையூர், பிள்ளைபெரு மாநல்லூர், ஆக்கூர், மேமாத்தூர், இளையா ளூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நன்றி தெரிவிக்கும் பயணத்தின் போது, பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த.விஜயக்குமார், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு பகுதிகளிலும் எம்.பி.சுதா வுக்கு உற்சாக வரவேற்பளித்து சால்வை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து வரவேற்ற னர்.