மயிலாடுதுறை, ஏப்.28-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் என 750 கிலோமீட்டர் தூரம் ரூ.8 கோடியே 6 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேமாத்தூர் அருகிலுள்ள மஞ்சளாறு பிரிவு வாழ்க்கை வாய்க்காலில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் வெள்ளியன்று தொடங்கி வைத்தனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் , நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக் குழு துணைத்தலைவர் பாஸ்கர், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜே.சேகர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.