மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலம் ரூ. 23.60 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்தப் பணிகளுக்கு காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் புதனன்று அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்பூகார்), எம். பன்னீர்செல்வம் (சீர்காழி), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் கமலஜோதி (சீர்காழி), நந்தினி (செம்பனார்கோவில்), மகேந்திரன் (குத்தாலம்), மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.