districts

img

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முன்நோக்கிச் செல்ல ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.17 -  மயிலாடுதுறை மாவட் டம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு தேர்ச்சி சதவீதம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் தொடர் பாக தலைமை யாசிரியர் களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடை பெற்றது. இதில் ஆட்சியர் தெரி விக்கையில், “மயிலாடு துறை மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10  ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முந்தைய 2 ஆண்டுகளை காட்டிலும், கடந்தாண்டு தேர்ச்சி சத வீதம் உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டை போலவே  இந்த கல்வி ஆண்டு துவக் கத்தில் இருந்தே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, பாடங்கள் வாரி யாக கல்வி வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு வினா-விடை கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாண வர்களை தினசரி பாடங்களை அன்றைக்கே படிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர் களை வெற்றியை நோக்கி  கொண்டு செல்ல வேண்டும்.  இந்த கல்வியாண்டில் நடைபெற்ற காலாண்டு தேர்வின் தேர்ச்சி சதவீதம் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை பொதுத்தேர்விற்கு தயார் படுத்த வேண்டும். 100 சத வீதம் தேர்ச்சி என்ற இலக்கை நோக்கி ஆசிரி யர்கள் செயல்பட வேண்டும்.  அதே நோக்கில், மாண வர்களை செயல்பட செய்ய  வேண்டும்.  மாவட்ட அளவில் உரு வாக்கப்பட்டுள்ள பாட வல்லுநர்கள் மற்றும் பள்ளி  ஆசிரியர்கள் ஒருங்கிணைப் புடன் பள்ளி பாடங்களை  எளிமையாக மாணவர் களுக்கு கல்வித்துறை அலு வலர்கள்  கொண்டு சேர்க்க  வேண்டும். மாநில அளவில்  10 மற்றும் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி சதவீதத்தில் மயி லாடுதுறை மாவட்டம் முன் நோக்கிச் செல்ல அனை வரும் ஒருங்கிணைந்து பணி யாற்ற வேண்டும்” என்றார். முதன்மை கல்வி அலு வலர் ஜெகநாதன், மாவட்ட  கல்வி அலுவலர் (தொடக்க நிலை பள்ளி) குமரேசன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலு வலர் (இடைநிலை) சாந்தி, முதன்மை கல்வி அலுவல ரின் நேர்முக உதவியா ளர்கள் கலந்து கொண்ட னர்.