districts

img

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

நாகப்பட்டினம், ஜூலை 21- உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கடைத் தெருவில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க  மாவட்டத் தலைவர் கே.டி.எம். சுஜாதா தலைமை வகித்தார். இச்சம்ப வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மீனவ  பெண்கள் ஆலோசகர், பெண்ணு ரிமை செயல்பாட்டாளர் பி.வனஜா, மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபா தேவி, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கள் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் சி.மாலா  நன்றி கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது பரவை காய்கறி சந்தை. இச்சந்தையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகளை வாங்கிச் செல்வர். இந்த சந்தைக்கு  தினமும் பொதுமக்கள், வியாபாரி கள், வர்த்தகர்கள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வந்து செல்கின்ற னர்.  சந்தையில், தினசரி இட்லிக் கடை  வைத்து பெண் ஒருவர் வியாபாரம்  செய்து வந்துள்ளார். இளம் விதவை யான அவருக்கு இட்லிக்கடைதான் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.  பருவமடைந்த சிறு வயது மக ளுடன் பரவை மார்க்கெட் அருகில் குடியிருந்து வந்தார்.  கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, இந்தப் பெண் வியாபா ரத்தை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, போதையில் வந்த மர்ம நபர்கள் அப் பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர். உயிருக்கு போரா டும் நிலையில் அப்பெண்ணை விட்டு விட்டு, வீட்டுக்குள் உறங்கிக்  கொண்டிருந்த அப்பெண்ணின் மக ளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.  மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பித்து விட்ட தாக கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய நிலையில் வீட்டின் பின்புறத் தில் கிடந்த அப்பெண்ணை நாகப்பட் டினம் தலைமை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று, உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.  இந்நிலையில் பரவை கடைத் தெரு மெயின் ரோட்டில் மாதர் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட  பெண்கள் பங்கேற்றனர்.