திருச்சிராப்பள்ளி, ஆக, 20- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த, 27 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநக ராட்சியுடன் இணைக்க உள்ளனர்.இதனால் ‘ மாடக்குடி ஊராட்சியின் விவ சாயம், கிராம மக்களின் வாழ்வாதார மாக விளங்கக் கூடிய100 நாள் வேலை திட்டம் பாதிக்கும், வீட்டு வரி உயரும். எனவே, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராமங்களை கொண்ட மாடக்குடி ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து மாடக்குடி கிராம பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்தனர்.
முற்றுகை
அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும் என கூறினர்.அதற்கு ஆட்சியர் அலுவலக நுழை வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் அனுமதிக்க மறுத்த னர். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் ஆட்சியர் அலு வலக நுலைவாயில் கதவுகளை இழுத்து மூடினர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், பாலு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெரால்டு, எடக்குடி சுரேஷ், சாத்தம்பாடி ரமேஷ், அகிலாம்பாள், அனைத்து வார்டு உறுப்பினர்கள், சுய உதவி குழுவினர், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக நுலைவாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் முக்கிய பிர முகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்ற னர்.