திருவாரூர், செப்.22- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத் தில் உள்ள பேரளம்-அன்னியூர் சாலையை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியக் குழு சார்பில் செப்டம்பர் 25 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் கூறு கையில், ‘‘பேரளம்-அன்னியூர் சாலை கடந்த 12-ஆண்டு காலமாக சீர் செய்யாமல் கிடப்பில் உள்ளது. இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வாலிபர் சங்கத்தின் சார்பாக படைகட்டி போராட்டம் நடைபெற்றது. அப்போது வட்டாட் சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆறு மாத காலத்தில் சாலையை புதுப்பித்து தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால், இது நாள் வரை சாலை மிகவும் மோசமாக பரா மரிப்பு இன்றி பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக தான் 13 கிராமத்தை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தினமும் நன்னிலம், பேரளம், பூந்தோட் டம், திருவாரூர் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் திருமீச்சூர் லலி தாம்பிகா கோவில், திருப்பாம்புரம் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் தனியார் பள்ளி படிக்கும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல பள்ளி பேருந்துகள் இந்த வழியாகத்தான் தின மும் தட்டுத்தடுமாறி அச்சத்துடன் மாணவர் களை அழைத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. தினந்தோறும் இருசக்கர வாக னத்தில் செல்லும் நபர்கள் கீழே விழுவதும் விபத்தில் காயம் அடைவதும் அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. எனவே, சாலையை உடனடியாக தரமான தார் சாலையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 25 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெறவுள்ளது’’ என்றார்.