districts

img

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களுடன் மலேசியா பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஏப்.20-  

  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள், மலேசியாவில் இயங்கிவரும் ஆசியா பசி பிக் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.  

  ஒப்பந்தத்தில் ஆசியா பசிபிக் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பாடத் திட்டக்குழுத்தலைவர் பேரா.முனைவர்  சாமுவேல் செல்வக்குமார், மருதுபாண்டியர்  கல்வி நிறுவனங்களின் செயலாளர் கொ. மருதுபாண்டியன் ஆகியோர் கையெழுத் திட்டனர்.  

  ஒப்பந்தத்தின் தொடக்கமாக, மருது பாண்டியர் கல்லூரியில் புதன்கிழமையன்று ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம்  ‘‘அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில் புரட்சி 4.0 மாணவர்களுடன் நாம் உண்மை யில் என்ன பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்ற தலைப்பில் பேரா.முனைவர் சாமு வேல் செல்வக்குமார் கல்லூரி பேராசிரியர் களுக்கு பயிற்சி அளித்தார்.

   மேலும், வரும் கல்வியாண்டில் மருது பாண்டியர் கல்லூரி மாணவர்கள், பேராசிரி யர்கள் ஒரு குழுவினர் ஆசியா பசிபிக் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சியை மேற்கொள்ள செல்ல  இருக்கிறார்கள்.  

  நிகழ்வில், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா. விஜயா, மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.