அரியலூர், ஜன.19- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூர் அனு மார் கோயில் கீழவீதியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் தியாகி கள் தினத்தை முன்னிட்டு, திருமெய் ஞானம் தியாகிகளான அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர்க ளுக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்ச்சிக்கு, தா.பழூர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெ.இராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் விவ சாய சங்க மாவட்ட செயலாளர் கே. மகாராஜன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் டி.செல்வராசு, சிலம்பரசன், மாவட்டக்குழு எ.தங்கராசு, கிளைச் செயலாளர் காமராஜ், காளிமுத்து, சூசை, பன்னீர்செல்வம், பாலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் அரியலூர் கட்சி அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை யில், மாவட்ட துணை தலைவர் சந்தா னம் முன்னிலையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாதர் சங்கம் பாக்கியம், வாலிபர் சங்கம் துரை.அருணன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.