districts

img

தரங்கம்பாடியில் போதைக்கு எதிராக மாரத்தான் ஓட்டம்

மயிலாடுதுறை மார்ச்-10,  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய தெரசா மகளிர் கலை  மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் வெள்ளியன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை தூய தெரசா கல்லூரி செயலர் அருள்சகோதரி கருணா ஜோசப்பாத், முதல்வர் காமராஜ் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். போட்டி யில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில்  பயிலும் 250 மாணவிகள் பங்கேற்ற னர்.  மயிலாடுதுறை குட் சமாரிடன் மெட்ரிக்குலேசன் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி ஹாபியா  முதல் பரிசை யும், மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி சரஸ்வதி இரண்டாம் பரிசை யும், மயிலாடுதுறை குட் சமாரிடன்  மெட்ரிகுலேஷன் பள்ளி 7 ஆம் வகுப்பு  மாணவி  தனுஷ்கா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, தொழிலதிபர் ஏ.கே. சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.