districts

மனோ பல்கலை. உறுப்புக் கல்லூரி முதல்வருக்கு எஸ்எப்ஐ பாராட்டு

தென்காசி, ஜூன் 7  

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றான சங்கரன்கோவில் நடுவக் குறிச்சி கல்லூரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றிய அப்துல் காதிர் புதனன்று விடைபெற்றார்.

   மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர். கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உழைத்த வர். கல்லூரியில் கணினி அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவ வித்திட்டவர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கல்லூரி யின் தேவைக்கான  கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியவர் முதல்வர் அப்துல்காதிர்  என  இந்திய மாணவர் சங்கத்தினர் கூறுகின்றனர். இவருடைய பாராட்டு நிகழ்வில் மாணவர் சங்க கிளை நிர்வாகிகள் அன்னலட்சுமி, மைதீன், முகேஷ், மனோஜ் மற்றும் மாவட்ட குழு செயலா ளர்  அருண் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.