திருநெல்வேலி, ஜன. 21- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மணி முத்தாறு அணை 3-வது முறை யாக நிரம்பி யது. அணையில் இருந்து 1,380 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை பகு தியில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது இத னால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 118 உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்117.50 அடியாக இருந்தது அணையில் இருந்து 380 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்தது. இந்தநிலையில் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான மாஞ்காச்சி, ஊத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.இதனால் அணைக்கு 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யின் நீர்மட்டம் 117.92 அடியாக உயர்ந்தது.. கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதிக்கு பிறகு 3 முறை மணிமுத்தாறு அணை நிரம்பி மறுகால் வழிந்துள்ளது.