திருச்சிராப்பள்ளி, பிப்.16 - திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 3 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்னழகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெய சீலன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், பன்னீர் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் நசீர்பானு, வட்டச் செயலா ளர் கோபாலகிருஷ்ணன், கிளை செயலா ளர்கள் சிவராமன், பி.முத்துச்சாமி, ரவி, திமுக கிளைச் செயலாளர் ரத்தினம், வட்ட பிரதிநிதி நல்லதம்பி, வி.சி.க. மாவட்டப் பொருளாளர் மதனகோபால் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். இதேபோல் 1 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சரோஜா சுப்பிரமணியை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது.