districts

img

மணப்பாறை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 -

     திருச்சிராப்பள்ளி மாவட் டம் மணப்பாறை வட்டம் வை யம்பட்டி கிராமம், லெட்சம் பட்டி பிரிவு ரோடு அருகே,  திருச்சிராப்பள்ளி - திண்டுக் கல் தேசிய நெடுஞ்சாலை யில் 25.6.2023 அன்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று  சென்றது. அப்போது எதிர் பாராதவிதமாக காரின் டயர்  வெடித்து, திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி  சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியது. இதில் ஏற் பட்ட விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தின ருக்கு தமிழ்நாடு முதலமைச் சரின் பொது நிவாரண நிதியி லிருந்து ரூ.2 லட்சம் வழங்கிட உத்தரவிடப்பட்டது.  

   அதன்படி விபத்தில்  உயிரிழந்த மணப்பாறை  வட்டம் உடையாப்பட்டி யைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன், ஐயப்பன், மணி கண்டன் மற்றும் ஆளிப்பட்டி யைச் சேர்ந்த நாகரெத்தினம் ஆகியோரின் குடும்பத்தின ருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து தலா ரூ.2 லட்சத்திற் கான காசோலையை, திருச்சிராப்பள்ளி மாவட்ட  ஆட்சியரகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச் சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன் னிலையில் வழங்கினார்.