districts

img

ஒப்பந்த, பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!

கரூர், அக்.27 - ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களையும், பகுதிநேர ஊழியர்களையும்  பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் மின் வட்டத்தில் பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு முதன்மை வரிசை பட்டியல் வழங்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு சங்க அலுவலக கட்டிடம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் க.தனபால், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.பி.கந்தசாமி ஆகியோர் பேசினர்.