சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வியாழனன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதல் ரயில்வே நிலைய சந்திப்பு வரை மதுரை மாநகர் காவல்துறையினருடன் இணைந்து சேர்மத்தாய் வாசன் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் 200 பேர் போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர், பூர்ணகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.