கும்பகோணம் அரசுக் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா
கும்பகோணம், டிச.28 - 2018-2019 ஆம் கல்வியாண்டில் படிப்பினை நிறைவு செய்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (U.G., P.G., & M.Phil.,) மாணவர்களுக்கு 30.12.2021 (வியாழக் கிழமை) முற்பகல் 10 மணியளவில் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), அண்ணா கலையரங்கில் பட்ட மளிப்பு விழா நடைபெறவுள்ளது. அது சமயம் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ம. செல்வம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை யாற்ற உள்ளார். மாணவர்கள் அனைவரும் பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டு மாணவர்கள் பட்டங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கல்லூரி யின் முதல்வர் துரையரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
டிச.31 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், டிச.28 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021 டிசம்பர் மாதம் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், டிச.31 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற வுள்ளது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயி களுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர் புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசா யிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.
காடுகள் வளர்ப்பு: கடனுதவி வழங்கல்
பொன்னமராவதி, டிச.28 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெங்கலமேட்டில் உள்ள பொன்னமராவதி வனச்சரக அலுவ லகத்தில் வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு வனத்துறை சார்பில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட மலம்பட்டி கிராம வனக்குழுவை நேர்ந்த ஆண், பெண் என இருபாலருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது. வனச்சரக அலுவலர் மேரிலென்சி 25 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபாயை வழங்கினார். வனவர் ஸ்ரீபல்லவி, வனக்குழு தலைவர் அழகுரத்தினம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இலவச வீட்டு மனை, பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, டிச.28 - வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்க ளுக்கு குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி குழு சார்பில் செவ்வாயன்று திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் கனல் கண்ணன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சி. பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் மணி மாறன் ஆகியோர் பேசினர். பின்னர் திருவெறும்பூர் வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மீனவர்கள் 50 சதவீத மானியம் பெற விண்ணப்பிக்கலாம் தஞ்சை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் தகவல்
தஞ்சாவூர்/புதுக்கோட்டை, டிச.28 - அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும், ஆழ்கடல் பகுதி யில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டும் மீனவர்களுக்கான ஒரு புதிய திட்டத்தினை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்டிட படகொன்றிற்காகும் செலவினத்தில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்ப டும். தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழி லில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனிநபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெற லாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை மீன் வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை எண்: 873/4, அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவ லக நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்துறை ஆணையர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கி ணைந்த கட்டிடங்கள், 3வது தளம், கால்நடை மருத்துவ மனை வளாகம், 571, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-600 035 என்ற முகவரிக்கு பதிவுஅஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 14.2.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டு உள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம், தகுதிவாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து (நேவல் Architect) பெற்று அசலாக கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங் களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் தெளிவுரைகளுக்கு எண்.873/ 4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரி யில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மேலும், கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், புதுக்கோட்டை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்களின் பாதை ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, டிச.28 - திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் ஊராட்சி பணமங்கலத்தில் பட்டியலின மக்களின் பாதையை மறித்து, முள் வேலி போட்டு தீண்டாமை நோக்கத்துடன் இழிவுபடுத்தி, ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். முள்வேலியை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பணமங்கலம் கிளை சார்பில் செவ்வாயன்று பணமங்க லத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற் றது. போராட்டத்திற்கு கிளை செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். போராட் டத்தை புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சுப்ர மணியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி னர். இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்ச நல்லூர் தாசில்தார் சக்திமுருகன், பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர் பாதையை ஆக்கிரமித்து போடப் பட்டிருந்த முள்வேலி உடனடியாக அகற் றப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி யான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் கூடுதல் வார்டு உருவாக்க கோரிக்கை
கும்பகோணம் டிச.28 - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி வார்டு மறுவரையறை குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் நகராட்சியை மாநக ராட்சியாக அமைக்கும் பொருட்டு, தாராசுரம் பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட்சிகளை, 7 பகுதி கிராம ஊராட்சி, 6 முழுமையான கிராம ஊராட்சி என 42.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இணைத்திட அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 13 கிராம ஊராட்சிகளில், 10 கிராம ஊராட்சி கள் மாநகராட்சியுடன் இணைப்பிற்கு இசைவும், 3 கிராம ஊராட்சிகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து தீர்மானம் வழங்கப்பட்டது. இந்நிலை அரசாணை (நிலை) எண்.85 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (தேர்தல்) நாள் 24.12.2021 இல் கும்பகோணம் மாநக ராட்சி மன்ற உறுப்பினர்கள் 48 என நிர்ணயம் செய்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தால் 27.12.2021 கும்பகோணம் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார், மறு வரையறை ஆணைய உறுப்பினர் மற்றும் செயலர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர செயலாளர் செந்தில் குமார். நகரக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி, ஏ.செல்வம், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி வார்டு மறுவரையறையை வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்து, மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி ஆற்றிட, கூடுதலான வார்டுகளை யும் உறுப்பினர்களையும் உருவாக்கிட வேண்டும். மாநகராட்சியில் 48 வார்டு கள் என அறிவிக்கப்பட்டதை கூடுதலாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்து தெரி விக்கப்பட்டது.
பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து ஜன.2 வரை கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தம்
கும்பகோணம், டிச.28 - பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி டிச.27 முதல் ஜன.2 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வேலை நிறுத்தப் போராட்டாத்தில் ஈடுபடுகின்ற னர். கும்பகோணத்தில், கடந்த இரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பட்டு நூல் விலை 3000 ரூபாயாக இருந்தது. தற்போது இதன் விலை 6,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டு நூல் விலை உயர்வுக்கு தகுந்தாற்போல் பட்டுப் புடவைகளின் விலைகளை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டுநூல் விலையை உடன டியாக குறைக்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து பட்டு நூல் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கும்ப கோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி சிறு-குறு உற்பத்தியாளர்கள் திங்களன்று முதல் ஒரு வாரத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். கும்பகோணம் மற்றும் திருபுவனம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு கைத்தறிகள் உள்ளன. இத்தொ ழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழிலாளர்கள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.