விருதுநகர், அக்.8- வைப்பாறு, அர்ஜூனா ஆறு, கௌசிகா ஆறு, குண்டாறு ஆகிய வற்றை 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மூலம் அரசு சீர மைக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத் துரை வலியுறுத்தினார். விருதுநகரில் “நீர்நிலைகளை காப்பாற்றுங்கள், ஊரக வேலைத் திட்டத்தை பாதுகாத்திடுங்கள்“ என வலியுறுத்தி ஞாயிறன்று கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம். சின்னத்துரை எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வைப்பாறு, அர்ஜூனா ஆறு, கௌசிகா ஆறு, குண்டாறு ஆகி யவை இருந்தன. தற்போது அந்நதி கள் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை பயன் படுத்தி அதை சீரமைக்க வேண்டும். விவசாயத்தை, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 2 லட்சம் ஹெக்டேர் வானம் பார்த்த பூமி உள்ளது. கால்நடைகள் குடிப்ப தற்கு கூட தண்ணீர் இல்லை. எனவே, இந்த ஆறுகளில் உள்ள கருவேலமரங்களை அகற்றிட வேண்டும். அதில் திடக்கழிவு, திர வக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக விருதுநகரில் எம்.ஆர்.வி. நினைவகத்தில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜேந்தி ரன் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் எம்.சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் சி.ஜோதி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் அ.பழனிச்சாமி துவக்கி வைத்துப் பேசினார். சின்னத்துரை எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட நிர்வாகி கள் பி.மலைச்சாமி, எம்.கே.பழ னிச்சாமி, வி.பூமிநாதன், எஸ்.கனக ராஜ், சி.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.