பெரம்பலூர், ஏப்.2 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை ஒன்றியப் பகுதிகளில் பெரம் பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு வாக்குகள் சேகரித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை பேசுகையில், “மகளிர் உரிமைத் தொகை, இலவச மகளிர் பேருந்து காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட மக்கள் பெரிதும் பயன்பெறும் திட்டங் களை தமிழக முதல்வர் செயல் படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். இதுபோல் மக்களவையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த இப்பகுதி மக்கள் கே.என்.அருண் நேருவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். பிரச்சாரத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் குன்னம் இராஜேந்தி ரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்ல துரை, ஏ.கே.ராஜேந்திரன், பெரம்ப லூர் ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியச் செய லாளர் நல்லதம்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உட்பட கூட்டணி கட்சி யினர் கலந்து கொண்டனர்.