திருவனந்தபுரம், மே 6-
நள்ளிரவில் ஓடும் பேருந்தில் காதலியை கத்தியால் குத்தி விட்டு, தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மூலங்காவைச் சேர்ந்தவர் ஷனில் (25). கோட்டயத்தில் ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தார். தமிழக எல்லையில் உள்ள கூடலுாரைச் சேர்ந்த வர் சீதா (24). ஆலுவாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், மூணாறு - பெங்களூரு இடையே கேரள அரசுப் பேருந்தில் அங்கமாலி என்ற இடத்தில் சீதா ஏறியுள்ளார். எடப்பாள் என்ற இடத்தில் ஷனில் அதே பேருந்தில் ஏறியுள்ளார். சீதாவிற்கு அருகே ஷனில் அமர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. இதையடுத்து ஷனிலை நடத்துநர் வேறு சீட்டில் மாற்றி அமர வைத்துள்ளார். இரவு 11.15 மணியளவில் திடீரென தன் வைத்திருந்த கத்தியால் சீதாவை குத்திய ஷனில், தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த பயணியகள் மற்றும் பேருந்து ஊழியர்கள், இருவரையும் திரூராங்காடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இதில ஷனில் நிலை கவலைக்கிடமாகஉள்ளது.