districts

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் தொகை ரூ.15 லட்சம்

தேனி, ஜூன் 28-

   வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புஉருவாக்கும் திட்டத்தில்சுய தொழில்தொடங்கவங்கிக்கடன் ரூ 15 லட்சம் மற்றும் மானியம் ரூ. 3.75 லட்சம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார் .

   இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

   அதிக எண்ணிக்கையிலான படித்த இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் “வேலை யில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு  உருவாக்கும் திட்டம் ” (UYEGP)” வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15இலட்சமும் அதற்கான மானியம் ரூ.3.75 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

   இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்து பொதுப்பிரிவினருக்கு 45 வயதுக்கு மிகாதவராகவும் சிறப்பு பிரிவினருக்கு 55 வய துக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  

   இத்திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டின் 2023-24 ஆண்டு கடன் திட்ட பயனாளி களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியானது இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. அதில்பயன்பெறஆர்வமுள்ளதொழில்முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற  இணையதளத்தில் விண்ணப்பம் செய்து இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் துவங்க முன்வரு மாறும் மேலும் விபரங்களுக்கு பொது மேலா ளர், மாவட்ட தொழில் மையம்,04546-252 081 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.