districts

சுமைப் பணித் தொழிலாளர்கள் 120 பேர் சிஐடியுவில் இணைந்தனர்

திருச்சிராப்பள்ளி, மே 16 - திருச்சி காந்தி மார்க்கெட் மந்தை பகுதி யில் 120 சுமைப்பணி தொழிலாளர்கள் இரவு  நேரத்தில் காய்கறி ஏற்றி இறக்கும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் அனை வரும் சிஐடியு சங்கத்தில் இனைந்தனர். இதை யொட்டி சங்க அமைப்பு நிர்வாகிகள் தேர்வு  கூட்டம் தாராநல்லூர் சிவாஸ் கல்யாண மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. சுமைப்பணி சங்க நிர்வாகி ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட  செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றி னார். சிஐடியு மாவட்ட தலைவர் ராமர், சுமைப்  பணி சங்க செயலாளர் சிவகுமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.  இரவு நேர மந்தை சுமைப்பணி தொழிலா ளர் சங்க தலைவராக ஜி.கே.குமார், செயலா ளராக ஹரிஹரன், பொருளாளராக ரவி,  துணைத் தலைவர்களாக, ஷேக், கருப்ப சாமி, சங்கர், துணைச்செயலாளராக சிவா, செல்வா, கமிட்டி உறுப்பினர்களாக முருகன், செல்வகுமார், முத்து, ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக தோழர்  கே.வரதராஜன் உருவப்படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.