districts

img

விளையாட்டு மைதானத்தில் மதுபாட்டில்கள், குப்பைகள்

திருச்சிராப்பள்ளி, மே 12-

     திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 28-ஆவது  வார்டு அண்ணா நகர் 2-ஆவது கிராஸ் விளை யாட்டு மைதானத்தில் உள்ள மது பாட்டில் கள், குப்பைகளை அகற்ற வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்கு பகுதிக் குழு சார்பில் தென்னூர் அரசமரம் அருகில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

     ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மேற்கு பகுதி செய லாளர் ரபீக் அஹமது, மூத்த தோழர் நடரா ஜன், சந்திரன் ஆகியோர் பேசினர். பகுதிக்  குழு உறுப்பினர் வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 28-ஆவது  வார்டு அண்ணா நகர் 2-ஆவது கிராஸ் விளை யாட்டு மைதானத்தில் உள்ள மது பாட்டில் கள், குப்பைகளை அகற்ற வேண்டும், விளை யாட்டு மைதானத்திற்கு வேலி அமைக்க வேண்டும், காமராஜ் நகரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும், 1,2 மற்றும் 4-ஆவது கிராஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளங் களை சரிசெய்து உடனடியாக சாலை அமைக்க வேண்டும், தென்னூர் ஆஞ்சநே யர் கோவில் சாலையில் உள்ள பள்ளங் களை உடனடியாக சரிசெய்ய வேண்டும், குத்பிஷா நகர் பகுதியில் முழுமையாக பாதா ளச் சாக்கடை இணைப்பை சரி செய்து, சாலையை அமைத்து கொடுக்க வேண்டும்,  தில்லை நகர் மெயின் ரோட்டில் உள்ள  உடைந்த நிலையில் இருக்கும் நடை பாதையை உடனடியாக சரி செய்ய வேண்டும், தென்னூர் அண்ணா நகர் வ.உ.சி.  சாலையில் அரைகுறையாக போடப்பட்டி ருக்கும் நடைபாதையை முழுமையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.