districts

img

ஆர்எஸ்எஸ் - பாஜக சூழ்ச்சிகளை முறியடிப்போம்! டெல்டாவில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

மயிலாடுதுறை, அக்.12 -  ஆர்எஸ்எஸ் - பாஜக சூழ்ச்சி களை முறியடிக்கும் விதமாக லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமு டன் பங்கேற்ற மனிதச் சங்கிலி இயக்கம் செவ்வாயன்று (அக்.11)  தமிழகம் முழுவதும் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மற்றும் ஆதரவு அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்ற னர். மயிலாடுதுறையில் சமூக நல்லி ணக்க மனித சங்கிலி கிட்டப்பா அங்காடி முன்பு செவ்வாயன்று மாலை நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர் பா.ரவிச் சந்திரன், சிபிஐ மாவட்ட செயலா ளர் ஏ.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில்  10 மையங்களில் பல்லாயிரக்கணக் கானோரின் பங்கேற்புடன் மனிதச்  சங்கிலி நடைபெற்றது. புதுக்கோட் டையில் நடைபெற்ற மனித சங்கிலி யில் காங்கிரஸ் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் சு.திருநாவுக்கர சர் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, ஆலங் குடி, கீரனூர், அன்னவாசல், மண மேல்குடி மற்றும் திருமயம் உள்ளிட்ட இடங்களில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் நன்னி லம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஒன்றியங்களில் மனிதச்  சங்கிலி நடைபெற்றது. குடவாசல்  வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனித சங்கி லிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.ராதா, நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலையி லிருந்து நடந்த மனித சங்கிலி இயக்கத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார ராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், விசிக மாநில இணைச் செயலாளர் இரா.ரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் பி. பாலச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் கிழக்கு ஒன்றியச் செய லாளர் பாரதி தலைமையில் நகர் ்மன்ற தலைவர் சுமதி சிவகுமார்  உள்ளிட்ட விடுதலை சிறுத்தை  கட்சி நிர்வாகிகள் ஜெயங்கொண் டம் காந்தி சிலை முன்பாக கடை வீதியில் அனைத்து கட்சியினரும்  மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் இருந்து வெங்கடேசபுரம் வரை   நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், அ.கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி கை காட்டியில் நடைபெற்ற போராட்டத் திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி செய லாளர் கலைச்செல்வன் தலைமை  வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முசிறி ஒன்றிய செய லாளர் நல்லுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கைகாட்டி முதல் துறையூர் ரோடு காவல்நிலையம் வரை பங்கேற்றனர்.

;