districts

img

வாசிப்பை நேசிப்போம்

நாமக்கல், செப். 23- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கிளை நூலக  வாசகர் வட்டத்தின் சார்பில் வாசிப்பை நேசிப்போம் என்கிற  தலைப்பில் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. வாசிப்பை நேசிப்போம் மற்றும் சிறுகதைகள் திருவிழா கூட்டம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் விடியல் பிரகாஷ் இந் நிகழ்விற்கு தலைமையேற்றார்.  இந்நிகழ்வில், அரசு பள்ளி  மாணவர்கள் சிறுகதை திருவிழாவில் கதைகள் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.  இதில், எழுத்தாளர்கள் கேசவ மூர்த்திராஜகோபாலன், கவிஞர் குமரேசன் மற்றும் பங்கஜம் ஆசிரியர், நலவாரிய செல் வராஜ், முனைவர் சண்முகம், தமிழ், சுரேஷ் அரசு பள்ளி  மாணவர்கள் விஷ்ணு தர்ஷன்,கபீஸ், ஆகியோர் சிறுகதை  திருவிழாவில் கலந்து கொண்டு சிறுகதைகளை எப்படி வாசிப் பது, எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து பேசினர்.  முடிவில், மருத்துவர் சண்முக சுந்தரம் நன்றி கூறி னார்.