அறந்தாங்கி, நவ.10 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத் திற்குட்பட்ட 53 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா மண மேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா, மண மேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவ யோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் ஒவ்வொரு கற்றல் மையங்களிலும் உள்ள கற்போருக்கு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. வாசித்தல், எழுதுதல், எண்ணறி போன்ற அனைத்து நிலைகளி லும் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.