கும்பகோணம், ஜூன் 10-
கோடை நெற்பயிரில் இலை சிலந்தி நோய் தாக்கு தலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தெரி விக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள கோடை நெற்பயிர்களில் வரப்புகளின் ஓரத்தில் தொடங்கி மற்ற இடங்களுக்கு இலை சிலந்தி நோய் தாக்குதல் பரவி யுள்ளது. இது நெற்பயிர் சாகுபடி இல்லாத காலங்களில் உள்ள எருமைப் புல்லில் இருந்து இனவிருத்தியாகி, 50 முட்டைகள் வரை இலைகளின் கீழ் இடுகிறது.
ஜூன், ஜூலை மாதங்களில் அதிகமாகக் காணப்படும் இந்த இலை சிலந்தி, ஒன்று முதல் மூன்று நாட்களுக் குள் வெளியில் வந்து, பத்து நாட்களுக்குள் முதிர்ந்து விடும். இந்த இலை சிலந்தி தாக்கிய இலைகளில் தவிடு தெளித்தது போல வெண்ணிறப் புள்ளிகள் உருவாகி, பின்னர் இலைகள் காய்ந்து சருகாகி விடும்.
தஞ்சாவூர் டெல்டா பகுதியான ஆடுதுறை, திருநீலக் குடி, புத்தூர், புதுக்குடி, கஞ்சனூர், முத்துப்பிள்ளை மண்ட பம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கோடை நெற்பயிர்களில் நாற்பது சதவீதம் வரை இந்த இலை சிலந்தி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அளவு தழைச்சத்தைப் பிரித்துத் தெளித்து, ஏக்கருக்கு பெனாசாகுயின் 10 இசி-2 மிலி அல்லது ஸ்பைரோமைசின் 240 எஸ்சி-0.5 மிலி அல்லது புரோ பர்கைட் 18.5 இசி-2 மிலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளித்துக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித் துள்ளார்.