அறந்தாங்கி, செப்.20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சுப்ரமணியபுரம் ஊராட்சி கூகனூர் குடியிருப்பு கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டாட்சியர் திரு நாவுக்கரசு மற்றும் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட கவுன்சிலர் சரிதா மேக ராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்ட னர்.